Powered By Blogger

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மகாத்மா காந்தி பற்றி இன்றளவும் பரவும் பொய்கள்

மகாத்மா காந்தி பற்றி இன்றளவும் பரவும் பொய்கள்


இன்று மகாத்மா காந்தியை பற்றி பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களிடம்  பொய்களை கூறி மூளை சலவை செய்கின்றனர்  யார் அவர்கள் ? என்னென்ன பொய்களை கூறுகின்றார்கள்,அவர்கள் அவ்வாறு  கூற என்ன காரணம் ஏன் என்று விளக்கமாக பார்ப்போம்,,

1. "காந்தி மட்டும் சுதந்திரத்திற்க்காக போராடவில்லை பலரும் போராடினார்கள் எல்லோரும் போற்றப்பட வேண்டியவர்களே காந்தியை விட நேரு சிறந்தவர்,நேதாஜி சிறந்தவர் ,அம்பேத்கர் சிறந்தவர்" இவ்வாறு  கூறுகிறார்கள் ,,,

இதற்க்கு விளக்கம் 1920 களில் இந்திய மக்களிடம் இந்தியா என்று உணர்வு இருந்ததா? அனைவரும் ஒன்றாக போராடினார்களா? என்றால் இல்லை,
அனைத்து உயர்சாதியினரும்  வெள்ளையர்களுக்கு ஒத்து ஊதி அவர்களுக்கு நாம்  நம் வயலில் விளைவித்ததை கொடுத்து அவைகளை அவர்கள் அங்கே அவர்கள்  நாட்டில் உற்பத்தி செய்து நம் நாட்டில் கொண்டு வந்து விற்பனை செய்தார்கள் ,காந்தி இந்தியர்களை ஒருங்கிணைக்கலாம் என எண்ணினார் ஆனால்,  இந்தியாவில் உள்ள 100% நிலங்களையும் உயர்சாதியினர் தான்  வைத்திருந்து வெள்ளையர்களுக்கு ஒத்து ஊதி வந்தனர்,,  எனவே இவர்களை ஒருங்கினைக்க ஒரே வழி தன் விலை தன் பொருள் தன் விற்பனை என்ற ஒத்துழையாமையின் உண்ணத கொள்கை வைத்து என் பொருள் நானே உற்பத்தி செய்து நானே விலை வைத்து நம் நாட்டு மக்களிடமே விற்க வேண்டும் நம் நாட்டு உற்பத்தியாளர்களிடமே பொருள் வாங்க வேண்டும் என்ற கொள்கை இந்தியா முழுவதும் எதிரொலித்தது. வடக்கே காஷ்மீர் முதல் தெற்க்கே கன்னியா குமரி வரையிலும் கிழக்கேபர்மா முதல் மேற்க்கே தற்போதைய பாக்கிஸ்தான் எல்லை வரையிலும் போராட்டம் ஒருங்கிணைந்து இந்தியா என்ற உணர்வோடு போராட ஆரம்பித்தனர் இந்த போராட்டம் ஆப்பிரிக்காவிலும் அகோரமாக எதிரொலித்தது. இதனால் முதல் உலகப்போரில் வெற்றி பெற்று ஒற்றை வல்லரசாக இருந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் 1930 களில் பெரும் வீழ்ச்சியும்,பொருளாதார மந்த நிலையும் தேக்க நிலையும் ஏற்பட்டு சின்னா பின்னமானது தான் காலனி நாடுகளில் சுதந்திர போரினை அடக்க முனைந்ததால் தனது கண்டத்தை கவனிக்க மறந்தது தான் அடித்து போட்ட ஜப்பான் அசுர வளர்ச்சியும் பல ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் வளர்ச்சியும் தனது மகளான ஐக்கிய அமெரிக்க குடியரசும் சிம்ம சொப்பனமாக உருவானது,, மேல சொன்ன மீப்பெரும் போராட்டத்திற்க்கு இந்தியா என்ற ஒன்றிப்பிற்க்கும் மக்களின் உணர்விற்க்கும் மகாத்மாதான் காரணம் என்று அந்த ஆசிரியர்களுக்கு ஆணி அறைந்தார் போல் அறைந்து காட்ட வேண்டும்,,

2.இரண்டாவது  காரணம் "மகாத்மா காந்தி இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை" என்பது

உண்மையில் காந்தியின் இடஒதுக்கீட்டு கண்ணோட்டமானது பொருளாதார ரீதியில் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்  அதுவும் இல்லாமல் தற்பொழுது சுதந்திர போராட்டமே முக்கியம் சுதந்திரம் பெற்ற பின்பு அண்ணன் தம்பி பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம் எதிரிக்கு இடம் கொடுத்தது போல் ஆகும்  எனவே நமக்கு ஒரே இலக்கு சுதந்திரம் அதில் பெண் உரிமை தீண்டாமை ஒழிப்பும் அங்கம் வகிக்கும் என்று மகாத்மா காந்தி  சொன்னார், ஆனால் அம்பேத்கார் கேட்கவில்லை  உடனேயே வெள்ளைக்காரர்களிடம் கூட்டணி வச்சு தலித்துக்களுக்கு தனி நாடு கோரினார், காந்தி தலித்துக்களுக்கு எதிரானவர் என்றும் விமர்சனம் செய்து வந்தார். உடனே காந்தி எரவாட சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார் தனது சுதந்திரப்போராட்டமும் மகாத்மா காந்தியின் போராட்டத்தை கண்டு மக்கள் அனைவரும் சாதி பேதம் மத பேதம் மொழி பேதம் இன்றி  வெள்ளைகாரர்களுக்கு எதிராகவும் அம்பேத்கருக்கு   எதிராகவும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். பின்னே அம்பேத்கார் தான் தவறை உணர்ந்து வெள்ளைக்காரர்களுடன் போட்ட ஒப்பந்த்தை ரத்து செய்து விட்டு எரவாட சிறையில் சென்று மகாத்மா காந்தியை சந்தத்து மன்னிப்பு கோரினார்,
காந்தியும் நமக்கு சுதந்திரம்தான் ஒரே இழக்கு சுதந்திரத்திற்க்குப்பின் நம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளாம் என்றும் அப்பொழுது மகாத்மா காந்தியிடம் அம்பேத்கார் கெஞ்சி தலித்களின் உரிமையை மீட்க ஒரு சில தொகுதிகளாவது தர வேண்டும் என்று கேட்டார் காந்தியும் தனது ஏனோ தானோ என்று மனமில்லாமல் சம்மதித்தார்.
சுதந்தரத்திற்க்கு பின்னே 1950 களில் அம்பேத்கார் சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வர அம்பேத்கார் தலித்துகளுக்கு கடவுளாகிப்போனார் அதனால் அவர் அன்று வெள்ளைக்காரர்களுடன் கூட்டணி வைத்து அரசியல் பேசியதை இன்று கூறி பொய்களை பரப்பி விடுகின்றனர் குறிப்பாக 1960 களில் படிக்க வந்து 1970 களில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மூலமாகநுழைந்தவர்கள் பெரும்பான்மையாக  அதை பரப்பு கின்றனர்


3. அடுத்து  அவர்கள் கூறும் அடி முட்டாள் தனமான ஒரு பொய் என்னவென்றால் பகத்சிங்கின் தூக்கை காந்தி நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்,, ஆனால் காந்தி தான்தான் இருக்க வேண்டும் என்று சுய நலம் வாய்ந்தவர் என்று வாய் கூசாமல் பொய்களை பரப்புகின்றனர்,, உண்மையில் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் போராட்டக்காரவர்கள் பிரிட்டீஸ் இந்திய காவல் நிலையத்தை சூரையாடி போலிசாரை கொன்றனர் வெள்ளையர்கள் ஊர்மக்களை சிறைபிடித்து சித்தரவதை செய்ய உடனே காந்தி தான்தான் அவர்களின் தவறுதலான போரட்டத்திற்க்கு காரணம் தன் மேல் ரத்தம் வந்தாலும் பிறர் மீது ரத்தம் வரக்கூடாது எனவே அவர்கள் செய்தததை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று மூன்று வருடம் சிறையில் அடைக்கப்பட்டார் அவர் சிறையில் இருந்தாலும் சுதந்திர போராட்டத்தை இந்தியா முழுவதும் நடத்துமளவிற்க்கு பக்குவபடுத்தி விட்டுச்சிறைக்குச் சென்றார்,,
தனது இளைய மகன் மணிலால் தனது தந்தை தூண்டிய  உப்பு சத்தியாகிரகத்தை பல ஊர்களில் முன்னெடுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டு அதிக படியான துன்பத்திற்கு  ஆளாகி தண்டு வடம் முறியப்பெற்று சுய நினைவின்றி 14 வருடம் சிறையிலேயே இருருந்து இறந்து போனார். தனது மனைவி கஸ்தூரி பாய் சாகும் வயதில் சுதந்தரப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று வருடம் சிறையில் அடைக்கப்பட்டு 68 வயதில்  சிறயிலேயே இறந்தார் சிறையிலேயே இறுதி சடங்கு நடந்தது. தனது மூத்த மகன் ஹரிலால் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து 8 ஆண்டுகள் சிறையில் இருந்து தெரு பிச்சைக்காரனாக இருந்து இறந்து போனார்.
மூன்றாவது மகனுக்கும் நான்காவது மகனுக்கும் இதில் ஈடுபாடு இல்லை எனவே அவர்களின் எட்டு வயது மகனையும் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபடுத்தினார் மகாத்மா. ஆனால் பகத்சிங்கை  எப்படி தான் வெள்ளைக்காரனிடம் விட்டு விடுங்கள் என்று கெஞ்சுவார் தனது குடம்பத்திற்க்காவே எவனிடமும் கெஞ்சாத மகாத்மா ஒரு போராளிக்கு எப்படி. ஒரு வேலை அப்படி மகாத்மா காந்தியோ இல்லை மற்றவர்கள் பகத் சிங்கை விட்டு விடுங்கள் என்று கூறினலோ அது பகத் சிங்கின் போராட்டத்திற்க்கு இழுக்கு என்பதை யாராவது உணர்ந்ததார்களா?

4.  அடுத்து காந்தியை பெண் பித்தன் என்று நா கூசாமல் பழி போடுவது,,
11 வயதில் திருமணம் செய்து 14 வயதிற்க்கு மேல் 17 வயதிற்க்குள் வீட்டிற்க்கு அடங்காமல் பல பெண்களுடன்  விருப்பத்துடன்  உடலுறவு வைத்துக்கொண்டார். பின் 17 வயதில் தன் தாயிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார் மாமிசம் உண்பதோ? மது அருந்துவதோ மனைவியை தவிற மற்ற பெண்களை ஏறெடுத்து பார்க்கவே மாட்டேன் இது உன்மேல் சத்தியம் என்று தாய் மீது சத்தியம் செய்து விட்டு 18 வயதில் இங்கிலாந்து படிக்கச் சென்றார் 18 வயது முதல் தன் மனைவியை தவிற வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்துப்பார்த்தது இல்லை வெளி நாட்டில் படிக்கும்போதும் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். தன் சுய சரிதையை எழுதும்போது இதையும் குறிப்பிட்டு இருப்பார் ஆனால்  அதையும் கேடு கெட்ட காழ்ப்புணர்ச்சி பிடித்த முட்டாள்கள் பரப்ப இன்றைய நவீன இளைஞர்களும் நம்புகிறார்கள்.

காந்தியின்  மூக்கு உரசுவது போலயும் தடுமாறி விழப்போவதை டான்ஸ் ஆடுவது போல் கிராப்பிக்ஸ் பண்ணி பரப்புகின்றனர்

உண்மையான படம்




போலியான படம் 


அடுத்து ஆஸ்திரேலய நடிகர் காந்தியின் வேசம் போட்டு 1960 களில் ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் அந்த நடிகர் சக நடிகையுடன் சேர்ந்து நடமானடியதை காந்தி நடனமாடுகிறார் என்றுபின்வரும் படங்களை  நா கூச்சாமல் பொய்களையும் கிராப்பிக்ஸ்களையும் பரப்புகின்றனர்





இனியும் காந்தியை பற்றிய இதுபோன்ற போலிகளை பொய்களை நம்பாதீர்கள் தோழர்களே..தேசபிதா  என அழைக்கப்பட மகாத்மா காந்தி அவர்கள் நூறு சதவீதம் தகுதி உடையவரே....அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி
எழுதியவர் - க.அழகர் www.facebook.com/samy.alagar.31


1 கருத்து: