Powered By Blogger

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

உண்மையில் யார் "சத்ரியர்கள்" ?? ஒரு தெளிவான அலசல்

உண்மையில்  யார் "சத்ரியர்கள்" ?? ஒரு தெளிவான அலசல்


சத்ரியர்கள்  என்ற வார்த்தயை மையப்படுத்தி  குறிப்பாக தமிழகத்தில் பல விதமான செய்திகள் உலாவுகின்றன,சிலர் இது குறிப்பிட்ட ஒரு ஜாதியின் வரலாற்று  வார்த்தையாகவும் பெருமைபடுத்துகின்றனர் ...உண்மையில்  சத்ரியர்கள்  யார் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் 
கிமு 2000 வாக்கில் வட இந்தியாவில்  "முன்  வேத காலம்" முடிந்து "பின் வேத காலம்" தொடங்கியது, அப்பொழுது மக்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டனர், பிரம்மனின் தலையில் பிறந்தவர்கள் பிராமணர்கள், பிரம்மணின் தோலில் பிறந்தவர்கள் சத்ரியர்கள்,பிரம்மனின் இடுப்பில் பிறந்தவர்கள் வைசியர்கள், இவர்கள் மூவருவரும் ஆரிய வர்த்ததின் உயர்ந்த பிரிவுகள் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத மக்கள் பிரம்மனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது வட இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டது.
இரண்டாம் பிரிவான சத்ரியர்களே ஆள்பவர்கள, சத்ரியர்களுக்கு ஆலோசனை குல குருவாக பிராமணர்கள் இருப்பார்கள், இவ்வாறு கி.மு 1000 ல் வட இந்தியா 16 மகாஜன பதங்களாக பறந்து விரிந்து இருந்தது, இது தற்போதைய ஈரான் தொடக்கம் வரையிலும், ஆப்கானிஸ்தான் முடிவு வரையிலும் பரந்து விரிந்து இருந்தது. தற்போதைய ஆப்கானிஸ்தான்தான் காந்தாரம் வரை
 1)அங்கம் 2)மகதம் 3)காசி 4)கோசலம் 5)வஜ்ஜி 6)மல்லம் 7)மத்சயம் 8)அவந்தி 9)சேதி 10)வத்சயம் 11)அஸ்மகம் 12)பாஞ்சாலம் 13)குரு 14)சூரசேனம் 15)காந்தாரம் 16) காம்போஜம் என்று பதினாறு மகாஜனபதங்களாக பிரித்து ஆண்டார்கள், இவர்கள் தங்களை தீயில் இருந்து பிறந்ததாக நம்பினார்கள், இந்த பதினாறு மகாஜன பதங்களின் ஆங்கில உச்சரிப்பு வேறு,, (இந்திய மொழிப் பெயர்கள் வேறு எனவே தாங்கள் ஆங்கில உச்சரிப்புகளை பயன்படுத்த வேண்டாம்)

இந்த பதினாறு மகாஜன பதங்களில் மகதம் மட்டுமே மிக பெரிய பலமான அரசாக இருந்தது, அதை கைப்பற்றி ஆட்சி செய்பவர் எல்லா பகுதியையும் கைப்பற்றி தலை நகராக வைத்துக் கொள்வார்கள்,, இப்படி மகத பேரரசை நந்த மரபு ஆண்டு, பின் மௌரிய மரபு ஆண்டு, சுங்கர்கள் குஷானர்கள் சாதவாகனர்கள் ஆண்டு, குப்தர்கள் கைக்கு வந்து கிமு 600 வரை ஒட்டு மொத்த வட இந்தியாவும் ஆளப்பட்டது.அவை ஒவ்வொரு மரபையும் பற்றி பேசினால் ஒரு வாரமாகும். வட இந்தியாவில் அந்த சமயத்தில் அனைத்து சத்ரியர்களும் சாதரணமக்களும் பௌத்தம் சமணத்தை தழுவிய காலமது, அப்படி தழுவினாலும் கிமு 600 க்கு முன்னே 16 மகாஜனபத ஆட்சியாளர்கள் பல லச்சக்கணக்கான சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள், பௌத்தம் சமணத்துக்கு மாரினாலும் பௌத்த கோவில்களும் சமண கோவில்களும் ஆயிரக்கணக்கில் கட்டினார்கள். பின் கிபி 600 ல் மகத்தை ஆண்ட குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்த பொழுது,, பௌத்தமும், சமணமும் சைவ வைணவத்திற்க்குள் கொண்டு வந்து அழிந்தது. சைவ வைணவ இந்து ஆட்சியாளர்களாக மீண்டும் அந்த பகுதி சத்ரியர்கள் எழுந்தார்கள் சுதந்திர ஆட்சியாரளர்கள் ஆனார்கள். அவர்கள் ராஜ புத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் அவர்ளின் பெண்கள் மிகவும் மிகவும் அழகானவர்கள் நிறமானவர்கள். இன்னும் பல ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினார்கள், தற்போதைய பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதியில் 7000 சிவ விஷ்ணு ஆலயங்கள் இருந்ததாக அரேபிய கவிஞர் குறிப்பிடுகிறார், சிந்து நதிக்கரை முழுவதும் கோவில்கள் கட்டப்பட்டது. தற்போதைய ராஜஸ்தான் குஜராத் பஞ்சாப், காஷ்மீர்,உத்ரணகண்ட்,உத்ரஞ்சல்,உத்ரபிரதேஷ் மத்திய பிரதேசம்,பீகார்,வங்கம் ஒரிசா,வட கிழக்கு மானிலங்கள் சிக்கிம் அசாம்,மேகலாயா என்று பல லச்சகணக்கான கோவில்கள் கலை நயமிக்க பிரமாண்டமாக கட்டப்பட்டது, அரசுகள் தங்கள் செல்வங்களை கோவில்களில் வைத்து பாதுகாத்தனர். தென்னிந்தியாவிலும் சாதவாகனர்களின் பிற்கால சந்ததிகள் பல்லவர்கள் கற்க்கலில் கோவில் கட்டும் முறைகளையும் கோவில் கட்டும் முறைகளையும் வடக்கிலிருந்து வரும் பொழுது அவர்களுடன் கொண்டு வந்தார்கள்,, ஏன் என்றால் தமிழர்களுக்கு கோவில் கட்டும் பழக்கம் இல்லை திறந்த வெளி கோட்டங்களும் நடுகல்களுமே வணங்கப்பட்டது. இதனாலேயே தென்னிந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவில்கள் இருக்கும் இருந்தாலும் அவை அனைத்தும் தமிழர் கட்டிய கோவில்கள் அல்ல தஞ்சை பெரிய கோவிலை தவிற மற்ற இன்றய தமிழக பெரிய கோவில்கள் 90% விஜய நகர ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள். நாம் தமிழகத்தில் பார்க்கும் அனைத்து கோவில்களும். சரி வடக்கே செல்வோம் வடக்கே பல ஆயிரக்கணக்கான கோவில்கள் கட்டி ஆட்சியளர்கள் வளப்படுத்திய பொழுது , கிமு 7 ம் நூற்றாண்டில் அரேபியர்கள் படையெடுப்பு பல ஆயிரம் முறை நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தானத்திலும் சிந்து சமவெளியிலும் இருந்த பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன செதில் செதிலாக இடித்து பொக்கிசங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போதைய ஆப்கானிஸ்தான் அன்றை நமது காந்தாராம் முழுவதுமாக அழிந்து இசுலாமிய வேறுபட்ட நாடானது நமது பரதகண்டத்தை விட்டு பிரிந்தது.
அடுத்து சிந்து சமவெளியின் மேற்க்கு பகுதி முழுவதுமாக அரேபியர்கள் வசம் போனது அடுத்து சிந்து நதியின் கிழக்கே உள்ள பகுதிகளை கொள்ளையடிக்க நுழைந்தனர் அரேபயர்கள் நொண்டு தைமூர் வந்து கொள்ளையடித்துச் சென்றான் கிபி800 களில் பல ஆயிரம் கோவில்களை இடித்து விட்டுச் சென்றான் அதற்க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிக பெரிய செல்வ களஞ்சியமான ராஜஸ்தானில் இருந்த சோம நாதபுரம் (சோம்நாத்) கோவில் இந்தியாவிலேயே எந்த தொடர்பும் இல்லாமல் கல்லால் ஆன லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் கோவில் பல ராஜ புத்திரர்களின் கலை பொக்கிசமாக விளங்கய சோமநாத புர கோவிலை கொள்ளையடிக்க கஜினி முகமது 16 முறை படையெடுத்து தோல்வியடைந்தான் இறுதியில் வெற்றி பெற்று இந்தியாவின் கலை பொக்கிசம் சுக்கு நூறாக உடைத்து எரியப்பட்டு, கொள்ளையடக்கப்பட்டது. பின் மிஞ்சிய ராஜ புத்திரர்கள் மக்களே வாழாத மத்திய பிரதேச காடுகளுக்குள் கஜிராகோ,உஜ்ஜயினி போன்ற இடங்களில் 1000 கிலோ மீட்டர்களில் பல ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டி பொக்கிசங்களை மறைத்து வைத்தனர்,
பின் அரேபிய படையெடுப்பாளர்கள் தங்கள் ஆட்சி பகுதியாக மாற்றி மீண்டும் வட இந்தியா முழுவதும் ஆட்சி செய்ய நுழைந்தார்கள் ராஜபுத்திரர்களின் பிரிந்து கிடுக்கும் தன்மையை அறிந்து பிரித்து விட்டு ஆள தொடங்கினார்கள் இதனால் வேதங்கள் தோன்றிய புண்ணிய பூமி என்று அழைக்ப்பட்ட உத்ரஞ்சில்தான் ஏராளமான சிவன் கோவில்கள் அதிகம் கங்கை சமவெளியில் சொல்லவே வேண்டாம் எல்லாம் கிமு 1500 வேத கால சிவ விஷ்ணு ஆலயங்கள் 8000 ம் பீகார் இந்தியாவின் கலை கட்டிக்கலையின் பொக்கிசம், ஆயிரக்கணக்கான சிவ ஆலயங்கள், ஆயிரக்கணக்கான விஷ்ணு ஆலயங்கள், ஆயிரக்கணக்கான புத்த கோவில்கள், ஆயிரணக்கான சமண கோவில்கள் நிறைந்தது பீகார், உத்திர பிரதேசம்தான் சொல்லவே வேண்டாமே கங்கை ஆற்று படுகையில் சிவன்,விஷ்ணு,ராமன்,கிருஷ்ணன் என்று பல ஆயிரணக்காண கோவில்கள் கட்டப்பட்டது. காஷ்மீரில் பல சிவன் சக்தி கோவில்கள் கட்டப்பட்டது, ராஜஸ்தானில் சொல்லவே வேண்டாம். அங்கு சிவன் விஷ்ணு சமண பெளத்த கோவில்கள் ஏரளமாக ராஜபுத்திரர்கள் கட்டினார்கள்,, குஜராத்தை பற்றி சொல்லவே வேண்டாம் அங்கு சமண சமயத்தின் பிறப்பிடம் பல ஆயிரக்கணக்கான சமண தீர்த்தங்கர்கள் கோவில்கள் சிவ விஷ்ணு ஆலயங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டது. கிபி 1000 ல் ராஜ ராஜ சோழன் ஒரு கோவிலை கட்டும்போது, குஜராத்தில் ஒரு விதவை ராணி ‪‎உதயமதி‬ தனது கணவருக்காக பல கிமீ பூகிக்கு கீழே கிணற்று வடிவில் மிக பிரமாண்டமாய் கட்டினால் அது வியப்பின் சரித்திர குறியீடு,, பெண்ணுக்காக ஆண் கட்டிய நினைவு சின்னம் தாஜ்மகால், ஒரு பெண் ஆணுக்காக கட்டிய நினைவு சின்னம் ராணி கீ வாவ்  600 ஆண்டுகள் பழமையானது(https://en.wikipedia.org/wiki/Rani_ki_vav),, தாஜ்மகால் க்கு  600 ஆண்டுகளுக்கு முன்னே கட்டப்பட்டது,,

உதயமதி கணவருக்காக கட்டிய அந்த கிணற்று வடிவ நினைவு கலைநயமிக்க கட்டிடங்கள்




இங்கு ராஜ ராஜ சோழன் ஒரு கோவில் கட்டும் பொழுது,, வட மேற்க்கில் பல ஆயிரம் கோவில்கள் நிலங்களை பறி கொடுத்த ராஜ புத்திரர்கள் மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சி பகுதிகளில் தலை நகரில் கோவில்கள் கட்ட பயந்து, மக்கள் வாழாத கஜிராகோவி உஜயினில் வெறும் 80 ஆண்டுகளில் 300 பிரமாண்ட கோவில்கள் கட்டப்பட்டது,, தாங்கள் தலை நகரில் கட்டினால் படையெடுப்பாளர்கள் படையெடுப்பார்கள் என்று. தங்கள் ஆட்சி பகுதியில் மறைவான மக்கள் வாழாத தெரியாத பகுதிகளில் பல ஆயிரம் கோவில்களை கட்டினார்கள். வடக்கே இன்னும் பல அரேபியர்கள் பாரசீகர்கள் புகுந்து ஆட்சி செய்ய உத்திர பிரதேச கோவில்கள் இன்னும் ஏரளாமாக இடிக்கப்பட்டது,, இசுலாமிய ஆட்சியாளர்கள் இடிக்க,இந்து ஆட்சியாளர்கள் மீண்டும் கட்ட இடிக்க கட்ட இப்படி 1600 வெள்ளையர்கள் வரும் வரை தொடர்ந்தது,, பின் அந்த ராஜ புத்திர பெண்களுக்கு வருவோம்
அரேபியர்கள் குறிப்பாக ராஜபுத்திரரர்களின் பொண்ணுக்காகவும் பெண்ணுக்காகவுமே படையெடுத்தார்கள், உயரமான சிவப்பான கோதுமை நிறமான அழகு பதுமைகள் ராஜ புத்திர பெண்கள், தமது ராஜா போரில் தோற்று விற்றார் என்ற செய்தி கேட்டாலே ஜவ்கர் என்னும் தீயில் விழுந்து உயிர் விடுவார்கள், எல்லா அரண்மனைகளிலும் அந்த ஜவ்கர் அறை இருக்கும் தங்கள் அரசு போரில் தோற்று விட்டது என்று செய்து ஒற்றர்கள் மூலம் அறிந்த உடன் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் அந்த அறைக்குள் சென்று தங்களின் உடை அணிகரன்கள் ஆடம்பர பொருட்கள் என்று அனைத்தையும் வைத்து ஒரு அரண் அமைப்பர்கள் பெரிய போர் போல்,, வேயந்து,, தீ மூட்டுவார்கள் பின் ஒவ்வொருவராக "ஜெய்பவானி", என்று கூறிக்கொண்டே தீயில் விழுந்து இறந்து விடுவார்கள்,,
வடக்கே மேலே குறிப்பிடபட்டவர்கள் தான்  உண்மையான சத்ரியர்கள்,, 

இன்று தென்னிந்தியாவில் யாரை பார்த்தாலும் சத்ரியர் சத்திரயர் என்று போட்டுக்கொள்காறார்கள்....அவர்கள் கூறும் வரலாறுகளும் போலியானவைகள்

எழுதியவர் - க அழகர் www.facebook.com/samy.alagar.31
பதிவேற்றியது  - www.facebook.com/theo.raveth



மகாத்மா காந்தி பற்றி இன்றளவும் பரவும் பொய்கள்

மகாத்மா காந்தி பற்றி இன்றளவும் பரவும் பொய்கள்


இன்று மகாத்மா காந்தியை பற்றி பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களிடம்  பொய்களை கூறி மூளை சலவை செய்கின்றனர்  யார் அவர்கள் ? என்னென்ன பொய்களை கூறுகின்றார்கள்,அவர்கள் அவ்வாறு  கூற என்ன காரணம் ஏன் என்று விளக்கமாக பார்ப்போம்,,

1. "காந்தி மட்டும் சுதந்திரத்திற்க்காக போராடவில்லை பலரும் போராடினார்கள் எல்லோரும் போற்றப்பட வேண்டியவர்களே காந்தியை விட நேரு சிறந்தவர்,நேதாஜி சிறந்தவர் ,அம்பேத்கர் சிறந்தவர்" இவ்வாறு  கூறுகிறார்கள் ,,,

இதற்க்கு விளக்கம் 1920 களில் இந்திய மக்களிடம் இந்தியா என்று உணர்வு இருந்ததா? அனைவரும் ஒன்றாக போராடினார்களா? என்றால் இல்லை,
அனைத்து உயர்சாதியினரும்  வெள்ளையர்களுக்கு ஒத்து ஊதி அவர்களுக்கு நாம்  நம் வயலில் விளைவித்ததை கொடுத்து அவைகளை அவர்கள் அங்கே அவர்கள்  நாட்டில் உற்பத்தி செய்து நம் நாட்டில் கொண்டு வந்து விற்பனை செய்தார்கள் ,காந்தி இந்தியர்களை ஒருங்கிணைக்கலாம் என எண்ணினார் ஆனால்,  இந்தியாவில் உள்ள 100% நிலங்களையும் உயர்சாதியினர் தான்  வைத்திருந்து வெள்ளையர்களுக்கு ஒத்து ஊதி வந்தனர்,,  எனவே இவர்களை ஒருங்கினைக்க ஒரே வழி தன் விலை தன் பொருள் தன் விற்பனை என்ற ஒத்துழையாமையின் உண்ணத கொள்கை வைத்து என் பொருள் நானே உற்பத்தி செய்து நானே விலை வைத்து நம் நாட்டு மக்களிடமே விற்க வேண்டும் நம் நாட்டு உற்பத்தியாளர்களிடமே பொருள் வாங்க வேண்டும் என்ற கொள்கை இந்தியா முழுவதும் எதிரொலித்தது. வடக்கே காஷ்மீர் முதல் தெற்க்கே கன்னியா குமரி வரையிலும் கிழக்கேபர்மா முதல் மேற்க்கே தற்போதைய பாக்கிஸ்தான் எல்லை வரையிலும் போராட்டம் ஒருங்கிணைந்து இந்தியா என்ற உணர்வோடு போராட ஆரம்பித்தனர் இந்த போராட்டம் ஆப்பிரிக்காவிலும் அகோரமாக எதிரொலித்தது. இதனால் முதல் உலகப்போரில் வெற்றி பெற்று ஒற்றை வல்லரசாக இருந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் 1930 களில் பெரும் வீழ்ச்சியும்,பொருளாதார மந்த நிலையும் தேக்க நிலையும் ஏற்பட்டு சின்னா பின்னமானது தான் காலனி நாடுகளில் சுதந்திர போரினை அடக்க முனைந்ததால் தனது கண்டத்தை கவனிக்க மறந்தது தான் அடித்து போட்ட ஜப்பான் அசுர வளர்ச்சியும் பல ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் வளர்ச்சியும் தனது மகளான ஐக்கிய அமெரிக்க குடியரசும் சிம்ம சொப்பனமாக உருவானது,, மேல சொன்ன மீப்பெரும் போராட்டத்திற்க்கு இந்தியா என்ற ஒன்றிப்பிற்க்கும் மக்களின் உணர்விற்க்கும் மகாத்மாதான் காரணம் என்று அந்த ஆசிரியர்களுக்கு ஆணி அறைந்தார் போல் அறைந்து காட்ட வேண்டும்,,

2.இரண்டாவது  காரணம் "மகாத்மா காந்தி இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை" என்பது

உண்மையில் காந்தியின் இடஒதுக்கீட்டு கண்ணோட்டமானது பொருளாதார ரீதியில் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்  அதுவும் இல்லாமல் தற்பொழுது சுதந்திர போராட்டமே முக்கியம் சுதந்திரம் பெற்ற பின்பு அண்ணன் தம்பி பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம் எதிரிக்கு இடம் கொடுத்தது போல் ஆகும்  எனவே நமக்கு ஒரே இலக்கு சுதந்திரம் அதில் பெண் உரிமை தீண்டாமை ஒழிப்பும் அங்கம் வகிக்கும் என்று மகாத்மா காந்தி  சொன்னார், ஆனால் அம்பேத்கார் கேட்கவில்லை  உடனேயே வெள்ளைக்காரர்களிடம் கூட்டணி வச்சு தலித்துக்களுக்கு தனி நாடு கோரினார், காந்தி தலித்துக்களுக்கு எதிரானவர் என்றும் விமர்சனம் செய்து வந்தார். உடனே காந்தி எரவாட சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார் தனது சுதந்திரப்போராட்டமும் மகாத்மா காந்தியின் போராட்டத்தை கண்டு மக்கள் அனைவரும் சாதி பேதம் மத பேதம் மொழி பேதம் இன்றி  வெள்ளைகாரர்களுக்கு எதிராகவும் அம்பேத்கருக்கு   எதிராகவும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். பின்னே அம்பேத்கார் தான் தவறை உணர்ந்து வெள்ளைக்காரர்களுடன் போட்ட ஒப்பந்த்தை ரத்து செய்து விட்டு எரவாட சிறையில் சென்று மகாத்மா காந்தியை சந்தத்து மன்னிப்பு கோரினார்,
காந்தியும் நமக்கு சுதந்திரம்தான் ஒரே இழக்கு சுதந்திரத்திற்க்குப்பின் நம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளாம் என்றும் அப்பொழுது மகாத்மா காந்தியிடம் அம்பேத்கார் கெஞ்சி தலித்களின் உரிமையை மீட்க ஒரு சில தொகுதிகளாவது தர வேண்டும் என்று கேட்டார் காந்தியும் தனது ஏனோ தானோ என்று மனமில்லாமல் சம்மதித்தார்.
சுதந்தரத்திற்க்கு பின்னே 1950 களில் அம்பேத்கார் சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வர அம்பேத்கார் தலித்துகளுக்கு கடவுளாகிப்போனார் அதனால் அவர் அன்று வெள்ளைக்காரர்களுடன் கூட்டணி வைத்து அரசியல் பேசியதை இன்று கூறி பொய்களை பரப்பி விடுகின்றனர் குறிப்பாக 1960 களில் படிக்க வந்து 1970 களில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மூலமாகநுழைந்தவர்கள் பெரும்பான்மையாக  அதை பரப்பு கின்றனர்


3. அடுத்து  அவர்கள் கூறும் அடி முட்டாள் தனமான ஒரு பொய் என்னவென்றால் பகத்சிங்கின் தூக்கை காந்தி நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்,, ஆனால் காந்தி தான்தான் இருக்க வேண்டும் என்று சுய நலம் வாய்ந்தவர் என்று வாய் கூசாமல் பொய்களை பரப்புகின்றனர்,, உண்மையில் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் போராட்டக்காரவர்கள் பிரிட்டீஸ் இந்திய காவல் நிலையத்தை சூரையாடி போலிசாரை கொன்றனர் வெள்ளையர்கள் ஊர்மக்களை சிறைபிடித்து சித்தரவதை செய்ய உடனே காந்தி தான்தான் அவர்களின் தவறுதலான போரட்டத்திற்க்கு காரணம் தன் மேல் ரத்தம் வந்தாலும் பிறர் மீது ரத்தம் வரக்கூடாது எனவே அவர்கள் செய்தததை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று மூன்று வருடம் சிறையில் அடைக்கப்பட்டார் அவர் சிறையில் இருந்தாலும் சுதந்திர போராட்டத்தை இந்தியா முழுவதும் நடத்துமளவிற்க்கு பக்குவபடுத்தி விட்டுச்சிறைக்குச் சென்றார்,,
தனது இளைய மகன் மணிலால் தனது தந்தை தூண்டிய  உப்பு சத்தியாகிரகத்தை பல ஊர்களில் முன்னெடுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டு அதிக படியான துன்பத்திற்கு  ஆளாகி தண்டு வடம் முறியப்பெற்று சுய நினைவின்றி 14 வருடம் சிறையிலேயே இருருந்து இறந்து போனார். தனது மனைவி கஸ்தூரி பாய் சாகும் வயதில் சுதந்தரப்போராட்டத்தை முன்னெடுத்து மூன்று வருடம் சிறையில் அடைக்கப்பட்டு 68 வயதில்  சிறயிலேயே இறந்தார் சிறையிலேயே இறுதி சடங்கு நடந்தது. தனது மூத்த மகன் ஹரிலால் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து 8 ஆண்டுகள் சிறையில் இருந்து தெரு பிச்சைக்காரனாக இருந்து இறந்து போனார்.
மூன்றாவது மகனுக்கும் நான்காவது மகனுக்கும் இதில் ஈடுபாடு இல்லை எனவே அவர்களின் எட்டு வயது மகனையும் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபடுத்தினார் மகாத்மா. ஆனால் பகத்சிங்கை  எப்படி தான் வெள்ளைக்காரனிடம் விட்டு விடுங்கள் என்று கெஞ்சுவார் தனது குடம்பத்திற்க்காவே எவனிடமும் கெஞ்சாத மகாத்மா ஒரு போராளிக்கு எப்படி. ஒரு வேலை அப்படி மகாத்மா காந்தியோ இல்லை மற்றவர்கள் பகத் சிங்கை விட்டு விடுங்கள் என்று கூறினலோ அது பகத் சிங்கின் போராட்டத்திற்க்கு இழுக்கு என்பதை யாராவது உணர்ந்ததார்களா?

4.  அடுத்து காந்தியை பெண் பித்தன் என்று நா கூசாமல் பழி போடுவது,,
11 வயதில் திருமணம் செய்து 14 வயதிற்க்கு மேல் 17 வயதிற்க்குள் வீட்டிற்க்கு அடங்காமல் பல பெண்களுடன்  விருப்பத்துடன்  உடலுறவு வைத்துக்கொண்டார். பின் 17 வயதில் தன் தாயிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார் மாமிசம் உண்பதோ? மது அருந்துவதோ மனைவியை தவிற மற்ற பெண்களை ஏறெடுத்து பார்க்கவே மாட்டேன் இது உன்மேல் சத்தியம் என்று தாய் மீது சத்தியம் செய்து விட்டு 18 வயதில் இங்கிலாந்து படிக்கச் சென்றார் 18 வயது முதல் தன் மனைவியை தவிற வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்துப்பார்த்தது இல்லை வெளி நாட்டில் படிக்கும்போதும் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். தன் சுய சரிதையை எழுதும்போது இதையும் குறிப்பிட்டு இருப்பார் ஆனால்  அதையும் கேடு கெட்ட காழ்ப்புணர்ச்சி பிடித்த முட்டாள்கள் பரப்ப இன்றைய நவீன இளைஞர்களும் நம்புகிறார்கள்.

காந்தியின்  மூக்கு உரசுவது போலயும் தடுமாறி விழப்போவதை டான்ஸ் ஆடுவது போல் கிராப்பிக்ஸ் பண்ணி பரப்புகின்றனர்

உண்மையான படம்




போலியான படம் 


அடுத்து ஆஸ்திரேலய நடிகர் காந்தியின் வேசம் போட்டு 1960 களில் ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் அந்த நடிகர் சக நடிகையுடன் சேர்ந்து நடமானடியதை காந்தி நடனமாடுகிறார் என்றுபின்வரும் படங்களை  நா கூச்சாமல் பொய்களையும் கிராப்பிக்ஸ்களையும் பரப்புகின்றனர்





இனியும் காந்தியை பற்றிய இதுபோன்ற போலிகளை பொய்களை நம்பாதீர்கள் தோழர்களே..தேசபிதா  என அழைக்கப்பட மகாத்மா காந்தி அவர்கள் நூறு சதவீதம் தகுதி உடையவரே....அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி
எழுதியவர் - க.அழகர் www.facebook.com/samy.alagar.31